கரூர் பரணி பார்க் பள்ளியில், உலக காகிதப்பை தின விழா நடைபெற்றது. நெகிழியை மறுப்போம், பசுமை உலகு சமைப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவில் பரணி பார்க் பள்ளியைச் சேர்ந்த மழலையர் பிரிவு குழந்தைகள், செய்தித் தாள்களை பயன்படுத்தி 500 காகிதப் பைகளை தாங்களே தயார் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.